இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நன்னீர் இறாலை சமைத்து சாப்பிடுவது ஒரு பிரபலமான உணவாகும். அதாவது இறால் சில நேரங்கள் ஆல்கஹாலில் ஊற வைக்கப்பட்டு பின்னர் நேரடியாக கொதிக்கும் நீரில் சமைக்கப்படுகிறது. அதன் பின் அந்த இறால்கள் பரிமாறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் இறால்களை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து அதில் ஆல்கஹாலை ஊற்றுகிறார். இதில் அந்த இறால்கள் எல்லாம் துள்ளி குதிக்கிறது. அதன் பின் சிறிது நேரம் கழித்து இறால்கள் இறந்த பிறகு, கொதிக்கும் நீரில் வேறொரு சமைக்கப்படுகிறது.

அதன் பின் அந்த இறால்கள் பரிமாறப்படுகிறது. இந்த  வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.