
உத்தரப் பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் பப்லு அன்சாரிக்கும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, பப்லு அன்சாரி, அஸம்கர் மாநிலம் மஹுலியை சேர்ந்த ரோஷன் ஜஹான் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்ற காதலி வீடு திரும்பியுள்ளார். அதன் பின் காதலனுக்கு திருமணம் ஆனதை அறிந்து கோபமடைந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு படுக்கையறையில் காதலனின் மனைவி உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த இளம்பெண் காதலனின் மனைவி கழுத்தை ரேசரால் அறுத்துள்ளார். பின்பு அங்கிருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் ரோஷன் அலறிய நிலையில், உறவினர்கள் அனைவரும் அறையை விட்டு வெளியே வந்து அந்த இளம்பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு காயமடைந்த ரோஷனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டினார். இந்நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரோஷனின் கணவரையும், அந்த இளம்பெண்ணையும் கைது செய்தனர். இதற்கிடையில் அந்த இளம்பெண்ணின் தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பப்ளி தனது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறினார். தற்போது காவல்துறையினர் அந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்து வருகின்றனர்.