தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம் பகுதியை சேர்ந்த கிஸ்ஸிங்கர் (33), லிவிங்ஸ்டன் (24), தூத்துக்குடி வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்த மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல் புரத்தைச் சேர்ந்த ரபேக் வேதா (25), மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பிழையாழி ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்கிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றவாளிகள் 4 பேருக்கும் கூட்டாக சேர்ந்து தாக்கியதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தல ரூபாய் 1000 அபராதமும் மற்றும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இவ்வழக்கை சிறப்பாக விசாரணை செய்த தூத்துக்குடி வடபாகம் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் நீதிமன்றத்தில் திறம்படவாதித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பாராட்டுகளை தெரிவித்தார்.