இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது நாக்பூரில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் டாஸ்மாக் கடையின் கவுண்டரின் கிரில் வழியாக வாலிபர் ஒருவர் உள்ளே நுழைகிறார். அதன் பின் அவர் அங்கிருந்து ரூ.25000 பணத்தை நைசாக திருடி செல்கிறார். இது தொடர்பான வீடியோ அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.