புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் சித்தன்னவாசல் கோடை விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய உள்துறை மந்திரி, தூங்கிக் கொண்டே பகல் கனவு காண்கிறார்.

அவருக்கு தமிழகத்தின் கள நிலவரம் பற்றி தெரியுமா? மற்ற மாநிலங்களை தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறார். ஆனால் தமிழகத்தை மற்ற மாநிலங்களைப் போல நினைத்துக் கொள்ளக் கூடாது.

அவர் நினைப்பது 1% கூட தமிழகத்தில் கிடையாது. தற்போது தமிழகத்தின் வருவாய் மத்திய அரசுக்கு நிதியாக எவ்வளவு செல்கிறது? மத்திய அரசு எவ்வளவு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கிறது? என்பதை அமித்ஷா தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு பெரும் நிதியின் அளவுக்கு தமிழகத்திற்கு திருப்பி தருவதில்லை என விமர்சித்தார்.