தேசிய தேர்வு முகமை GPAT 2023 நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டி உள்ளது. இந்த தேர்வு முதுகடை பார்மசி படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் https://gpat.nta.nic.in என்ற இணையதளம் மூலம் பெறப்பட்டது.

இதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 6ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் வருகின்ற மார் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 14ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விண்ணப்ப படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.