இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, மேற்குவங்கம், ஜம்மு -காஷ்மீர், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், தமிழகம், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உட்பட 64 அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.