உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் உலகில் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது.

அதன்படி பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோன்று இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவுகிறது. இதுவரையில் 3395 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.