“ஓபிஎஸ் தேற மாட்டார் என்று தெரிந்ததால் அவரிடம் இருந்து விலகியிருக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். அதிமுக பிரிவுக்குப் பின் ஓபிஎஸ்-உடன் நெருக்கமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டது பிடிக்காமல் விலகியிருக்கிறார். அதிமுக மீண்டும் ஒன்றிணைவதுதான் கட்சி வெற்றிபெற ஒரே தீர்வு என்று அவர் பேட்டியளித்திருக்கிறார்.