பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். ராமதாஸ் குலதெய்வம் என்றும், அன்புமணி எதிர்காலம் என்றும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இவர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28 12.2024-ம் தேதி நான் நியமிக்கப்பட்டேன்.

சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் தனது குலதெய்வம், அன்புமணி ராமதாஸ் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.