உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் தொடர்ந்து ராகுல் காந்தி முன்னிலை வகித்தார். இந்நிலையில் தற்போது 6.60 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ரேபேலி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் ராகுல் காந்தியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளார்.