முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் பலமுறை புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.