
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டார். இந்த சூழலில் திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் திலகபாமாவுக்கு பதிலாக சையத் மன்சூரை பொருளாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.