
சேலம் அருகே அதிமுக நிர்வாகி பைனான்ஸ் ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மேச்சேரி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாவுக்கும் பைனான்ஸ் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த அதிமுக நிர்வாகி ராஜா பைனான்சியரை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார்.
மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பைனான்ஸ் ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.