
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளை பிரசவம் தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ பணியாளர்கள் வேலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதார துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிக ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அத்தியாவசிய பொருட்களுடன் விரைவு மீட்பு குழு உதவியுடன் மருத்துவ பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.