
தனுஷ் நயன்தாராவுக்கு இடையே இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட பாடலை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன் பிறகு நயன்தாரா தனுஷை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவைவிசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நானும் ரவுடிதான் பட காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.