இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பல்லவாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பூ போட்டு மரியாதை செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது,

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார்.