
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் சிலரை நீக்கம் செய்துள்ளார்.
அதிலிருந்து சில நிமிடங்களிலேயே அந்த நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் தலைவராகிய தன்னால் மட்டும்தான் கட்சி நிர்வாகிகளை நீக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மதுரை மாவட்ட பாமக நிர்வாகிகள் 8 பேரை மாற்றி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தற்போது திருநெல்வேலி மேற்கு, தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் கிழக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
