மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த பொது குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ குமரி ஆனந்த் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.