
தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள் 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை சற்று முன் வெளியானது. அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உட்பட 25 பேரூராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. 29 கிராம ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளது.