பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,  சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்படுவோம். ராமதாஸின் சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கைகளை பின்பற்றுவோம்.

ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன். பாட்டாளி மக்கள் என்பது தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல, தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி. பொறுப்புகள் வரும், போகும் தொண்டர்களின் அன்பே நிரந்தரம் என கூறியுள்ளார்.