மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டால் இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.