பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் சந்தித்து பேசிய பிறகும் எந்த சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

மேலும் தனது மூச்சுக்காற்று இருக்கும் வரை நான் தான் பாமகவில் தலைவராக இருப்பேன் என ராமதாஸ் அறிவித்தார். மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்கி புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இன்று மணவாள நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் கூறியதாவது, என் மீது கோபம் இருந்தால் ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும்; இன்று தந்தையர் தினம், மருத்துவர் ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.

100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. வருத்தப்படாதீர்கள், நீங்கள் உருவாக்கிய கட்சி இது; இன்று நீங்கள் தேசிய தலைவர்,
நீங்கள் கோபப்படக்கூடாது. கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ் என அன்புமணி கூறியுள்ளார்.