
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்குவது போல இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களின் நடிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இனிவரும் காலங்களில் சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், துணை நடிகைகள், நடிகர்கள் என அனைவருமே கண்டிப்பாக நடிகர் சங்க அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அவர்கள் நடிகர் சங்க அடையாள அட்டையை வைத்திருந்தால்தான் கேமரா முன் நின்று நடிக்க முடியும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினர்களாக சேர்ப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம், செலவுகள் மற்றும் ஈமச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுவரை நடிகர் சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இனி அதனை பற்றி எடுத்துரைத்து வருகிற 20-ஆம் தேதிக்குள் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை உடனடியாக செய்யுமாறு நடிகர் நடிகைகள் மற்றும் அவர்களின் மேலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.