தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர். தற்போது ஜவான், இறைவன், டெஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில் அவர்களுடைய திருமணம் முடிந்து தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இன்று தங்களுடைய முதல் திருமண நாளை கொண்டாடும் நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நேற்று தான் எங்களுடைய திருமணம் முடிந்தது போல் இருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)