
மொராக்கோ நாட்டில் உள்ள பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோக்கு சொந்தமாக cr7 என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
தீயை விரைவாக அணைத்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஹோட்டல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.