
இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்க், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவர். இவர் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த பினிஷர் ஆகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தலாக விளையாடினார். அதன் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி ரிங்கு சிங்குக்கும், எம்.பி பிரியா சரோஜிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அதனை அடுத்து அவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்களது திருமணம் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது அவர்களது திருமணம் பிப்ரவரி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, நவம்பர் மாதத்தில் ரிங்குவின் கிரிக்கெட் பணிகள் உள்ளதால் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.