திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப் குமார். இவருடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டுவதாக தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன் பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் தன் பெயரில் வரும் போலி கணக்குகளை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.