ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கிய தி.மு.க கழக வேட்பாளர் திரு வி.சி சந்திரகுமார் தொகுதி வாக்காளர்களின் ஒரு முகமான ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2023  ஆம் ஆண்டு இடைத்தேர்தலிலும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றது.

இந்த முறை நடைபெற்ற இடை தேர்தலில் அரசியல் முக்கியத்துவம் கருதி தி.மு.க வேட்பாளர் திரு வி.சி சந்திரகுமார் ஒரு மனதாக அறிவிக்கப்பட்டார். சமூக சீர்திருத்த புரட்சியாளர் பெரியார் ஈவேரா குறித்தும் திராவிட இயக்க கருத்தியல் மற்றும் நோக்கங்களை அவமதித்து அநாகரிக அரசியலை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியின் சங் பரிவார் கும்பலுக்குரிய வெறுப்பு அரசியலை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முற்றிலுமாக  நிராகரித்து இருக்கின்றார்கள். அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி பரப்பும் வரலாறு காணாத வெற்றிக்கு கட்டியம் சுற்றியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது என்று முத்தரசன் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.