இங்கிலாந்து- இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 113 ஒவ்வொரு 471 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 3ஆவது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் 60 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் பந்து முட்டை வடிவமாக மாறுகிறது என இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.

எனவே பந்தை மாற்றி தர கோரி கூறினர். ஆனால் அதனை சோதனை செய்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக தான் உள்ளது என தெரிவித்து வேறு பந்தை கொடுக்கவில்லை.

இதனிடையே ரிஷப் பண்ட் நடுவர் ஒருவரிடம் பந்தை மாற்றி தர கோரி கேட்டார். ஆனால் பண்ட் முன்னரே நடுவர் பந்தை பார்த்துவிட்டு சரியாகத்தான் உள்ளது என கூறியதும் கடுப்பான பண்ட் பந்தை வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.