
திருவனந்தபுரம் எம்.பி சசிதரூருக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் சமீப காலமாக நல்லுறவு இல்லை. இவர் ஆப்ரேஷன் சிந்தூர் விவாகரத்தில் மோடியை புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை நேரடியாக விமர்சிக்கவில்லை. மறைமுகமாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி நிலை குறித்து சசி தரூர் எழுதிய கட்டுரை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, அவசரநிலை ஒரு தற்காலிக ஒழுங்கை கொண்டு வந்தது என்றும் ஜனநாயக அரசியலின் சீர்குலைவியிலிருந்து நிவாரணத்தை வழங்கியது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால் இந்த விதிமீறல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் சர்வதிகாரமாக மாறியதன் விளைவாகும். அவசர நிலையின் போது எந்த ஒழுங்கு தோன்றி இருந்தாலும் அது நமது குடியரசின் ஆன்மாவின் விலையில் வந்தது ஆகும் என்று கூறினார்.
இந்தியாவில் அவசரநிலை கொண்டு வந்த இந்திரா காந்தி கடந்த 1997 மக்கள் நிராகரித்து பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்பி கூறியதாவது சக தலைவர் ஒருவர் பா. ஜனதா குரலில் வார்த்தைக்கு வார்த்தை பேச தொடங்கும்போது பறவை கிளியாக மாறுகிறதா என்று தான் யோசிக்க தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.