அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தற்போது இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கருத்து கணிப்பில் அமலா ஹரிஸுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக்ஸிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிக்சில் ஒபாமா கமலா ஹாரிசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிக்சில் ஒபாமா முன் வைத்துள்ளார்.

அதில் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் டிரம்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. மேலும் வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கின்றது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதோடு அவரிடம் சரியான கொள்கைகள் இருக்க வேண்டும் எனவும் அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறோம். அதோடு கோபப்படக்கூடாது என்றெல்லாம்  நினைக்கிறோம். ஆனால் டொனால்ட் டிரம்பின் மோசமான குணத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. அவரிடம் நாம் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. கொள்கையை பற்றிய புரிதல், பேச்சாற்றல், நேர்மை ஒழுக்கம் என எதையுமே நாம் எதிர்பார்ப்பதே இல்லை என்று அவர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.