சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசி உள்ளார் நடிகர் ரஜினி. அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதிலும் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார் அவர் கருணாநிதி கண்ணுலையே விரல் விட்டு ஆட்டியவர் என்றும் அவரை போன்றவர்களை சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலை வணங்குகிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ” மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி பல் விழுந்து தாடி வளர்த்து சாகிற நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் இதையெல்லாம் மறந்துவிட்டு ரஜினிகாந்த் ஏதோ ஒன்றை பேசுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் “துரைமுருகன் எனது நண்பர். எனக்கு மிகவும் அவரை பிடிக்கும். துரைமுருகன் கூறியதில் வருத்தம் எதுவும் இல்லை. துரைமுருகன் உடனான நட்பு எப்போதும் போல தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கட்சிக் கொடியை அறிவித்த நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.