
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதாவது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை – கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த தேதிகளில் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.