திருபுராவில் உள்ள தலாய் மாவட்டத்தில் அம்பாஸ்சா பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வாகன சோதியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வாகனம் ஒன்று சென்றது. அதை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அதில் 80 ஆயிரம் யாபா மாத்திரைகள் அந்த வாகனத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த மாத்திரைகளை கைப்பற்றிய காவல் துறையினர், அந்த வாகனத்தின் ஓட்டுனரையும் கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. இதுகுறித்து முதல் மந்திரி மாணிக் சஹா தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.