பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று பைக்கில் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்லும் புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனக்கு லிப்ட் கொடுத்த நபருக்கு நன்றிகளை தெரிவித்து இருந்தார். இந்த பதிவுக்கு சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் கிழக்கு பெங்களூரு என்ற ட்விட்டர் கணக்கில், வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதை மும்பை போலீசார் தயவு செய்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவிட பட்டிருந்தது.

இந்த பதிவு நடிகர் அமிதாப்பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மும்பை போலீசார் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் உங்களுடைய பதிவு போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாலை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நடிகர் அமிதாபச்சனிடம் பல விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும் அவர் எளிமையாக பைக்கில் சென்றது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பைக்கில் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றது போக்குவரத்து விதிமீறல் என்பதால் போக்குவரத்து போலீசார் கவனத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.