சுவிட்சர்லாந்தில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைய அணிய தடை விதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த பொது வாக்கெடுப்பில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைய அணிய தடை விதிக்க வேண்டும் என்று 51% பேர் ஆதரவு அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் வருகிற ஜனவரி 2025 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடையை அணியும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது இந்த சட்டத்தை மீறினால் அந்நாட்டு பணத்தில் 100 பிரான்சிஸ் அதாவது இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தை உடனே கட்ட தவறினால் ஆயிரம் பிரான்சிஸ் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று விமானங்கள், தூதராகங்கள், மத வழிபாடு தளங்கள் முகத்தை மறைக்காவிட்டால் உடல் நல ரீதியாக பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் இந்த சட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.