உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டது இந்தியா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கும் என தெரிவித்தார்.

அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் எதிர்வரும் ஆண்டும் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொருளாதார நிலை தன்மையை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.