2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டென்டரை தமிழ்நாடு அரசு கோரி உள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதற்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள  www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் இணையதளத்தில் ஆன்லைன் டெண்டர் கோருவதற்கு வரும் 25.06.2025 இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கக் கூட்டம் வருமே 28ஆம் தேதியும் ஜூன் 6-ம் தேதியும் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 8gb ரேம் 256 gb ssd கொண்ட Hard Disk 14 அல்லது 15.6 இன்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையான இந்த மடிக்கணினி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு ஓராண்டு உத்திரவாத சான்றும் 3 ஆண்டுகளுக்கு சேவை சார்ந்த ஆதரவும் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.