தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, மக்கள் குடும்ப ஆட்சியை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

திமுக தொடர்ந்த இரண்டாவது முறையாக ஜெயித்ததாக இதுவரை வரலாறு கிடையாது. அதே வரலாறு தான். இனி மாறப்போவதில்லை. அவர்கள் சொல்வதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அவர்களது அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதனை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.  மேலும் அதிமுக- பாஜக கூட்டணி என்று அமித்ஷா கூறியதிலிருந்து திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

அதனால்தான் ஒன்றை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் பயம், தோல்வி பயத்தில் ஏதாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.