பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை பாயல் அண்மையில் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இவர்கள்தான் காரணம் என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி தன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு இன்ஸ்டா பதிவினை போட்டு பாயல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். அதாவது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என நடிகை பாயல் பரபரப்பு குற்றசாட்டினை தெரிவித்துள்ளார்.

நான் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்வுடன் ஒரு படம் கூட செய்தது கிடையாது. ஆனால் நான் அவரை சந்தித்த 3-வது மீட்டிங்கிலேயே அவர் என்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் பல குற்றச்சாட்டுகளை சுமதி உள்ள நிலையில் தற்போது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Payal Ghosh (@iampayalghosh)