
உத்தரப்பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரண் யாதவ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த ரியா பிரஜாபதி (வயது 17) என்ற மாணவி, தேர்வுக்கான ரூ.800 கட்டணத்தை செலுத்தாததற்காக நுழைவுச்சீட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
தேர்வை எழுத முடியாது என்ற மனவேதனையில் சனிக்கிழமை வீட்டுக்கு வந்த ரியா, தனிமையில் அறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பள்ளி நிர்வாகத்தின்மீது பெரும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.