தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து சிவகுமாரின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்ததாக உறவினர்கள் காவல்துறையினரிடம் கூறினர்.

இதனால் அவருடைய மரணத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தினர். அதன்படி முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் உயிரிழந்த போது அவர் அருகில் மது பாட்டில்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது அதனை காவல்துறையினர் ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தால்தான் அவருடைய மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.