மதுரையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து விமர்சிக்கும் வகையில் வீடியோக்கள் இருந்தது. இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில் அவர்கள் முன்னிலையிலே இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தது. அதே சமயம் பெரியாரை தங்கள் கட்சியின் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்ட தவெக தலைவரும் நடிகருமான விஜய் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது தவெக கொள்கை பரப்புச் செயலாளர் என்ற அடிப்படையில் மாநாடு நடைபெற்ற தினமே 2 பக்க அறிக்கையை வெளியிட்டேன். இது தெரியாமல் சிலர் விமர்சனம் செய்து வருவதாகவும், தங்கள் கட்சித் தலைவர் விஜயின் குரலாக தான் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் கூறினார்.