திருவள்ளூரில் உள்ள ‘திருவிழா’ உணவகம், சாப்பாடு வழங்குவதில் மோசடி செய்ததாக நுகர்வோர் நீதிமன்றம் ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நித்திய செல்வி என்ற பெண், 2023-ஆம் ஆண்டு தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 230 பேருக்கு உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால், உணவகம் 90 பேருக்கு மட்டுமே உணவு வழங்கியதாக புகார் எழுந்தது.

நித்திய செல்வி இது குறித்து உணவகத்திடம் விளக்கம் கேட்டபோதும், பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நித்திய செல்வி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது உணவகத்தின் சேவை குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ‘திருவிழா’ உணவகத்திற்கு ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.