மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ள பாதிப்பால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புக் குழுவும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அரசு கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.