கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளியில் உள்ள திப்பு நகர் பகுதியை சேர்ந்த தாய் அனுஷா ஹீலிமாரா. இவர் கடந்த திங்கட்கிழமை அதிகமாக சேட்டை செய்ததால் தனது மகனின் கை, கால்கள் மற்றும் கழுத்துகளில் இரும்பு கம்பியை காய்ச்சி சூடு வைத்துள்ளார்.

அதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி உள்ளார். அவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் இதுபோன்ற இரக்கமற்ற செயலை செய்ததால், அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் இச்சம்பவத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும், கவனிப்பையும் வழங்கி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.