மதுரை மாவட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஊத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு மாதமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கழக நிர்வாகிகள் என 10000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அதனால் அலங்கார விளக்குகள், ஏசி வசதியுடன் கூடிய இருக்கைகள், பிரம்மாண்டமான கட்டவுட்டுகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு வந்துள்ளார்.

மேலும் இன்று 25 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்று முதலமைச்சர் பொதுமக்களை சந்திக்கிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை வரும் முதலமைச்சர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், மதுரைக்கு வரும் முதல்வரே உங்களின் ஆட்சியில் இந்த மதுரைக்கு என்ன செய்தீர்கள்? நீங்கள் நடக்க புதிய ரோடுகள் ஆனால் மதுரை மக்கள் நடப்பது?.

கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்த ஐடி பார்க் திட்டம் எங்கே?. அதிமுக ஆட்சியில் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இதுதான் உங்கள் விடியல் ஆட்சியின் விளைவுகள் என்றால் மக்கள் ஏற்க முடியுமா?.. என பதிவிட்டுள்ளார்.