
நாட்டில் அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ஒரு இளைஞர் ஆட சொல்லி வற்புறுத்திய வீடியோ கண்டனத்திற்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து இரினா மொரோனா என்ற வெளிநாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இந்திய ரயில்களில் இரண்டாவது பிளாட்பாரங்களில் கழிவறை சுத்தமாக இல்லை என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 52 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இவர் இந்த பதிவில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், தான் ஒரு அமெரிக்கா, ருமேனியா மற்றும் கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவர் உதய்பூர் சிட்டி ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார். இதனிடையே முதல் வகுப்பு ரயிலின் கழிவரையையும் வீடியோ எடுத்து போஸ்டாக போட்டுள்ளார். இந்த வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram