9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருகான இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய ஒரு நாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். அவரின் செயல்பாடுகள் பி சி சி ஐ க்கு திருப்தி அளிக்க இல்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டி20 உலக கோப்பையை வென்றதுடன் சர்வதேச t20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அவரை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டன் நியமிக்க உள்ளதாக ஐ பி சி சி ஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.